இயற்கணிதம்

காரணித்தேற்றம்:

     P(x) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி n>1  மற்றும் a என்பது ஒரு மெய்யெண் எனில் 
    1) P(a) =0 ஆக உள்ளபோது (x- a) என்பது P(x) இன் ஒரு காரணி ஆகும்.
     2)  (x- a) என்பது P(x) இன் ஒரு காரணி எனில் P(a) =0 ஆகும்.

தீர்வு:

 P(x) என்பது வகுபடும் கோவை மற்றும்  (x- a) வகுக்கும் கோவை.
பல்லுறுப்புக் கோவையின் வகுத்தல் விதியின் படி ,   
                P(x) =(x- a) q(x)+ p( a) இதில் q(x) என்பது ஈவு மற்றும் மீதி p( a) ஆகும்.
1) P(a) =0 எனில் P(x) =(x- a) q(x) ஆகும்.மேலும் (x- a) என்பது P(x) இன் ஒரு காரணி.
  2)  (x- a) என்பது P(x) இன் ஒரு காரணியானதால்,
               P(x) =(x- a) g(x)
P (a) =(a -a)g (a)
           =0 *g (a)
           =0
 (x- a) என்பது P(x) இன் ஒரு காரணி எனில் எனில் P (a) =0

எடுத்துக்காட்டு:

2x^3 -6 x^2 +mx +4  இன் ஒரு காரணி ( x -2) எனில் m இன் மதிப்பு காண்க:

தீர்வு:

P(x) =2x^3 -6 x^2 +mx +4   என்.
காரணித்தேற்றத்தின் படி, P(2) =0  எனில்  ( x -2) ஒரு காரணியாகும்.
                   
                      P(2) =0  
 2(2)^3-6(2)^2 +m(2). +4=0
       2(8)-6(4) +2m +4=0
                 -4 +2m =0
                 M =2

Comments

Popular posts from this blog